ஆற்றங்கரையினிலே

ஆசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 248
Weight250 grams
₹125.00 ₹121.25    You Save ₹3
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனிதகுலம் தோன்றி மாண்புடன் வாழ்ந்து செழித்த வளமான நிலப்பகுதிகளாக ஆற்றங்கரைகள் திகழ்ந்தன. புகழ்பெற்ற நாகரிகங்கள் அனைத்தும் ஆற்றங்கரைகளில்தான் தோன்றியுள்ளன. ஏனெனில் மனித தேவைக்கும், பண்பாட்டுச் செழிப்புக்கும், நாகரிக வளர்ச்சிக்கும் ஆறுகள் பயன்பட்டன. எனவே நாகரிகங்களுடைய ஊர்கள் ஆறுகளின் கரைகளிலே தோன்றலாயின. அப்படித் தோன்றி வளர்ந்த ஊர்களிலே மக்களின் மன அமைதிக்கும் மாண்புறு வாழ்க்கைக்கும் இறைவழிபாடு ஏற்பட்டது. “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்னும் நன்மொழி முதன்மை யாக்கப்பட்டு “கோயிலில்லா ஊரிலே குடியிருக்க வேண்டா' என்று குடியிருந்த ஊர்களிலே கோயில்கள் எடுத்தனர். நீர்வளம் கருதி பெரும்பாலும் ஆற்றங்கரையினிலே ஊர்கள் தோன்றின. அந்த வகையில் ஆற்றங்கரைகளில் அமைந்த ஊர்கள் பற்றியும் அவ்வூர்களில் எழுந்த திருக்கோயில்கள் பற்றியும் முறையாக ஆய்ந்து வகைப்படுத்தித் தொகுத்தளிக்கப் பட்டுள்ள "ஆற்றங்கரையினிலே” என்னும் இந்நூலை ஆய்வறிஞர் ரா.பி. சேதுபிள்ளை அவர்கள் எழுதியுள்ளார்..

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.பி.சேதுப்பிள்ளை :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :