இழந்த நாகரீகங்களின் இறவாக் கதைகள்

ஆசிரியர்: ஆர்.எஸ்.நாராயணன்

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 226
ISBN978-81-2341-963-3
Weight250 grams
₹145.00 ₹140.65    You Save ₹4
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புராணங்களையும், சடங்குகளையும், வழிபாடுகளையும் பகுத்தறிவுவாத நோக்கில் புறக்கணிக்கும் அடிப்படையில் இந்த நூல் எழுதப்படவில்லை . இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள் என்ற இந்த நூல் எவ்வாறு புராணம் புராதன அறிவியலுடன் தொடர்புள்ளதாக அமைந்துள்ளது என்பதை விளக்குகிறது.இக்கால அறிஞர்கள் மறைந்த நாகரிகங்களின் புராணக் கதைகளை வரலாற்றின் சான்றுகளாக மதிப்பிடுகின்றனர். பழம்பெரும் எகிப்து, சுமேரியா, சிந்துசமவெளி, கிரிஸ், ரோம் ஆகிய நாகரிகக் காலத்து மனிதர்களின் தெய்வக் கதைகளைச் சமூக அறிவியல் அடிப்படையில் நோக்க வேண்டிய அவசியத்தை ‘புராணமும் பகுத்தறிவும்' என்ற முதல் கட்டுரை வலியுறுத்துகிறது. ஆதிகாலத்தில் மனிதன் வேட்டையாடிய மிருகங்களை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் கொடுத்த மிருகங்களை அவன் தெய்வமாக்கினான். இதுவே மதத்தின் மூலவேர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இதை இரண்டாவது கட்டுரை ஆராய்கின்றது. பின்பு வேளாண்மை தொடங்கிய காலகட்டத்தில் எகிப்து, சுமேரியா,பாபிலோனியா, ஹூரைத்தியா, ஹித்தைத், மேற்கு செமிட்டிக் ஆகிய மறைந்த நாகரிகங்களின் பல்வேறு புராணக்கதைகள் சொல்லப்பட்டு உள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.எஸ்.நாராயணன் :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :