ஐந்திணை எழுபது
ஆசிரியர்:
பதிப்பகக் குழு
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81?id=1060-0917-5394-4417
{1060-0917-5394-4417 [{புத்தகம் பற்றி மனித உணர்வுகளை நுட்பமாகப் புரிந்து கொண்டு, அந்த உணர்வுகளின் போக்கையும், அவற்றால் அமையும் அகவாழ்வு புறவாழ்வுகளையும் தெளிவாக வகுத்துக் காட்டியிருப்பவர்கள், பழந்தமிழ் நாட்டுப் பாவலர்களும், அறிஞர்களுமே ஆவர்.
<br/> பருவத்தின் எழுச்சியோடு இணைந்து நிலத்தின் தன்மைகளும், காலத்தின் தன்மைகளும் எவ்வாறு எல்லாம் மக்களின் வாழ்வை உருவாக்குகின்றன என்பதையும், அவர்கள் இலக்கியச் சுவையோடு சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
<br/> இது தமிழ் மொழிக்கே உரிய ஒரு தனிச்சிறப்பாகவும், அறிஞர் உலகத்தால் வியந்து போற்றப்பெறுகின்றது.
<br/> இவ்வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்திணை ஒழுக்கங்களிலும், காதலர்களின் உணர்வுகளும், செயல்களும், பேச்சுக்களும் எவ்வாறு எல்லாம் அமைந்து விளங்கின என்பதனைச் சுவையாகவும், நுட்பமாகவும் விளக்குவது, மூவாதியரின் ஐந்திணை எழுபது என்னும் நூல் ஆகும்.
<br/> அந்த நூலின் செய்யுட்களைத் தழுவிக் காதலர்களின் வாழ்வுப்போக்கை அனைவருக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுவதற்கு முயன்றிருக்கின்றேன். அந்தக்கால வாழ்வுச் செழுமையை அறிந்து போற்றவும் இது உதவும்.
<br/> தமிழன்பர்கள் இந்த இனிய நல்லதமிழ் விருந்தினை விரும்பி வரவேற்பார்கள் என்று நம்புகின்றேன். அன்னை பராசக்தியின் அருளையும் நினைந்து வணங்கிப் போற்றி இதனைத் தமிழ் உலகுக்கு வழங்கி மகிழ்கின்றேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866