கற்பகவல்லி நாயகி மாலை

ஆசிரியர்: உ.வே.சாமிநாதையர்

Category இலக்கியம்
Publication டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
FormatPaperback
Pages 72
Weight100 grams
₹35.00 ₹33.95    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கற்பகவல்லி மாலை என்னும் இந்நூல் அருமையான தோத்திர இலக்கியமாகும். திருமயிலையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஒரு மயிலைக் கற்பகத்தைப் பக்தி உருக்கத்துடன் துதிக்கும் செஞ்சொல் பனுவல் நூல் இது. விருத்தப் பாக்களால் ஆன இந்நூற் பாட ல் க ள், பாராயணத்திற்கும், பண்ணுடன் பாடு வதற்கும் பொருத்தப் பாக்களே ஆகும்.அருள் மிகு கற்பகாம் பாள், திருக் கோயிலில் தொண்டாற்றிய ஒரு பெருமகனாரே, இந்நூலை இயற்றியவர் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.திருக்கோயில் பணிகள் - பூசைகள் செழிக்கவும், நோய் நீங்கவும், வதந்திகள் ஒழியவும், வளம் பெருகவும் அம்பிகை யிடம் வேண்டிக் கொள்ளும் பல பாடல்கள் இந்நூலுள் உள்ளன. எனவே, இந்நூலைப் பாராயணம் செய்தால் அவ்வகைகளில் நிறைவுகள் ஏற்படும் எனக் கொள்ளலாம்.இந்நூலுக்கு பொழிப்புரை போன்ற ஓர் உரை கிடைத் துள்ளது. மூலத்தில் உள்ளதைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான செய்திகள் கொண்டதாக அவ்வுரை உள்ளது. உரைநடைத் தன்மை வேறுபட்டதாகவும் உள்ளது. - இப்பக்தி நூல் உண்டெனப் பலராலும் பலகாலும் பேசப் பட்டது; எழுதப்பட்டது. இப்பொழுது இந்நூல் அச்சில் வெளி வரத் திருவருட்சக்தி ஆணையிட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
உ.வே.சாமிநாதையர் :

இலக்கியம் :

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் :