தித்திக்கும் திருநெல்வேலி சமையல்

ஆசிரியர்: இந்திரா ராமநாதன்

Category சமையல்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper pack
Pages 32
Weight50 grams
₹10.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



காரடை
தேவையான பொருட்கள்:
அரிசி-- 1கப்
வெல்லம்- ஒன்றே கால் கப்
தண்ணீர்-ஒன்றே கால் கப்
காராமணி-1டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1கப்
ஏலம்- 6 நெய்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
காராமணியை வாணலியில் போட்டு வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
அரிசியை நன்கு கழுவி சுத்தப்படுத்தி ஊறவைக்கவும். ஊறியபின்னர் தண்ணீரை வடித்து உலரவிட்டு இடிக்கவும். இடித்த மாவை சலித்து வறுத்துக் கொள்ளவும். நன்கு சிவக்கும்வரை வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லத்தைப் பொடித்துப்போட்டு வெல்லம் கரைந்தவுடன் அதில் வறுத்த மாவு, காராமணி, தேங்காய் துருவல், ஏலப்பொடி போட்டு கலக்கவும்.
கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கடைசியாக நெய்விட்டு இறக்கவும். பாதி வெந்திருந்தால் போதுமானது. இறக்கிய மாவை வடைபோல் தட்டி நடுவில் ஓட்டை போடவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா ராமநாதன் :

சமையல் :

சங்கர் பதிப்பகம் :