தையல் கற்பவர்களுக்கான அடிப்படை விஷயங்கள்

ஆசிரியர்: மணிமேகலை பிரசுரம்

Category சுயமுன்னேற்றம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaper Back
Pages 98
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பளபளப்பான துணிகளை இஸ்திரி செய்யும் போது துணியின் பளபளப்பு மறைந்து போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரத் துணியை இஸ்திரி செய்யும் துணியின் மீது போட்டு விரைவாக இஸ்திரி செய்யவேண்டும்.
மெல்லிய துணிகளான பட்டு, மெல்லிய நூல் துணி, ரேயான் ஆகியவற்றுக்கு மறுபக்கத்தில் துணியின் மேலேயே இஸ்திரி செய்யலாம். கெட்டியான மடித்துத் தைத்த பாகமாக இருந்தால் ஓர் ஈரத் துணியால் அந்த இடத்தைத் துடைத்துவிட்டு இஸ்திரி செய்ய வேண்டும்.
நாம் தைக்கப் போகும் உடைக்குத் தேவையான அளவு துணி இருக்கிறதா என்பதை முதலில் பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் நனைத்தால் சுருங்கக் கூடிய துணியாக இருந்தால் முன்னர் குறிப்பிட்டபடி நனைத்த பிறகு துணியை வெட்டத் தொடங்கவும். வெட்டுவதற்கு முன் துணியை நன்கு இஸ்திரி செய்து கொண்டு வெட்டப்போகும் பாகங்களை மிகச்சரியாகக் குறித்துக் கொண்டு பின்னர் வெட்டவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மணிமேகலை பிரசுரம் :

சுயமுன்னேற்றம் :

மணிமேகலைப் பிரசுரம் :