பாரதி காலமும் கருத்தும்
ஆசிரியர்:
தொ.மு.சி. ரகுநாதன்
விலை ரூ.570
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+?id=1174-4018-0277-4524
{1174-4018-0277-4524 [{புத்தகம் பற்றி தொ.மு.சி. ரகுநாதனுக்குச் சிறப்புமிக்க சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த நூல் இது.
<br/>
<br/>தமிழகத்தில் ஜீவானந்தத்துக்கு அடுத்தபடியாக சுப்பிரமணிய பாரதியின் பணிகளையும் பாட்டுகளையம் ஆராய்ந்து அவற்றின் சிறப்பைத் தமிழ் மக்களிடையே பரப்பி வந்தவர் மறைந்த புகழ்மிக்க எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன்.
<br/>
<br/>பாரதி கவிஞரே அல்லர் என்றும், கவிஞர்தான், ஆனால் வேதாந்தக் கவிஞர் என்றும், உலகக் கவிஞர் அல்லர் தேசியக் கவிஞர் என்றும் பின்னர் மகாகவிஞர் என்றும் மதிப்பீடுகள் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளன.
<br/>
<br/>சங்க காலத்திலிருந்து பல வளர்ச்சிப் படிநிலைகளைக் கடந்து முன்னேறிய தமிழரும் தமிழும் இருபதாம் நூற்றாண்டில் தலை நிமிர்ந்து வாழத் தொடங்கியது பாரதியாரால்தான் என்பது இன்று அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை. இதில் பாரதிதாசனின் பங்கும் பாத்திரமும் சிறப்புமிக்கவை.
<br/>
<br/>ரகுநாதன் கூறுவதுபோல், "பாரதி பற்றிய குறிப்புகள் பலவற்றிலும் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட, திரிக்கப்பட்ட, திரையிட்டு மூடப்பட்ட பாரதியின் இலக்கிய மற்றும் அரசியல் வாழ்வின் ஓர் அம்சத்தை இந்த நூல் ஆராய்கிறது". எனினும், பல கோணங்களிலிருந்து திறமையாகச் செய்யப்படுகிறது.
<br/>
<br/>ரகுநாதனுக்கு முன்னும் பலர் பாரதியை ஆய்ந்தனர். அவர்களுடைய கருத்துக்களைத் திறனாய்வு செய்தும் புதுச் செய்திகளைப் பல நூல்களிருந்து அரணாகத் திரட்டியும் தந்து நிறைவு செய்துள்ளார் ரகுநாதன். அரிய முயற்சி; சிறந்த பனி அதாவது ஏறத்தாழ தமிழகத்தில் ஒரு நூற்றாண்டுக் கால அரசியல் சமூக மாற்றங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் மிக விரிவாக விளக்கிக் கூறும் ஆவணம் இது.
<br/>
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866