பார்க்கவன் பாதை

ஆசிரியர்: வே. காசிநாதன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 344
Weight350 grams
₹200.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பார்க்கவர்கள் வரலாற்றை “பார்க்கவன் பாதை” எனும் நூலாகப் பதிவு செய்கிறார் உயர்திரு. ஏஆர்.வி.காசிநாதன் உடையார் எனும் செய்தி கேட்டு சிந்தை மகிழ்ந்தேன். வாதாடும் அறிவும், பேச்சால் வசீகரிக்கும் திறனும், போராடும் குணமும், யாரோடும் நட்பாகும் மனமும் கொண்ட திராவிட இயக்கச் சிந்தனையாளர் திருமிகு. ஏஆர்.வி.காசிநாதன் உடையார், நாடறிந்த பேச்சாளர்; நல்ல தமிழ் எழுத்தாளர்! அன்னாரது எழுத்தும் பேச்சும் தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்து மேடைகளிலும் இதழ்களிலும் புரட்சியை ஊட்டியவை புதுமையைச் சேர்த்தவை.
தமிழனுக்குச் சரியான வரலாறு இல்லை , சங்க கால இலக்கியங்களைக் கொண்டுதான் நமது வரலாற்றை ஓரளவு அறிய முடிகிறது. குறிப்பாகப் பார்க்கவர்களுக்கு என வரலாறு எதுவும் எழுத்து வடிவில் இல்லை. கல்வெட்டு, செப்பேடு, செவிவழிச் செய்திகள் இலக்கியம் போன்றவற்றில் மறைந்து கிடக்கும் பாராண்ட பார்க்கவனின் பெருமைகளை எல்லாம் ஒரு ஆய்வாளருக்கு உரியப் பார்வையோடு தொகுத்து, 'பார்க்கவன் பாதை' எனும் நூலாகத் தந்துள்ளார். தமிழுக்கும், நமது இனத்திற்கும் காசிநாதன் ஆற்றியுள்ள தொண்டு பாராட்டுதலுக்குரியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வே. காசிநாதன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :