பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

ஆசிரியர்: நாகலட்சுமி சண்முகம்

Category சுயமுன்னேற்றம்
Publication மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
FormatPaper Back
Pages 340
Weight300 grams
₹399.00 ₹379.05    You Save ₹19
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தன்னுடைய இருபதாண்டுகாலச் சமூகப் பணியின் ஊடாக மெலின்டா கேட்ஸ் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான்: நீங்கள் ஒரு சமுதாயத்தை உயர்த்த விரும்பினால், பெண்களை அடக்கி ஒடுக்குவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.

நம்முடைய மனத்தை நெகிழச் செய்கின்ற இப்புத்தகத்தில், தன்னுடைய பணியின்போதும் உலகப் பயணங்களின்போதும் தான் சந்தித்த உத்வேகமூட்டும் நபர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்ட படிப்பினைகளை மெலின்டா நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

குழந்தைத் திருமணத்தில் தொடங்கி, பெண்களுக்குக் கருத்தடைப் பொருட்கள் எளிதில் கிட்டாமல் இருப்பது மற்றும் பணியிடத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மைவரை, நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி நம்மால் மறக்க முடியாத விதத்தில் மெலின்டா கொடுத்துள்ள விவரிப்புக்கு, அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் பக்கபலமாக விளங்குகின்றன.

இந்நூலை உணர்ச்சிகரமாகவும் வெளிப்படையாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ள மெலின்டா, அசாதாரணமான பெண்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பதோடு, ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுவதால் உருவாகின்ற சக்தியையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார். நாம் மற்றவர்களை உயர்த்தும்போது, அவர்கள் நம்மை உயர்த்துகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாகலட்சுமி சண்முகம் :

சுயமுன்னேற்றம் :

மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் :