மருமக்கள்வழி மான்மியம்

ஆசிரியர்: கவிமணி சி.தேசிகவிநாயகம் பிள்ளை

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 128
Weight100 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி வேளாளர் குலத்தில் பிறந்த ஒரு பெண், தன் ஜீவிதகாலத்தில் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி வருந்துகிறாள். இவள் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பதினாறாவது வயதில், ஒரு பிரபுவுக்கு ஐந்தாம் மனைவியானாள்; கணவன் வீட்டில், மாமி சக்களத்திகள் மதினி முதலியோரால் இவள் அடைந்த துன்பத்திற்கு அளவில்லை . சிறிது நாளில், இவள் கணவனுக்கும் அவன் மருமகனுக்கும் குடும்பக் காரியங்களை முன்னிட்டு மனஸ்தாபம் உண்டாயிற்று. மனஸ்தாபம் முற்றி வழக்காய் முடிந்தது. வழக்கு முடியுமுன் கணவன் வியாதியில் வீழ்ந்தான். அச்சமயம் அவனுடைய அவகாசிகள்செய்த துன்பங்களைச் சொல்லி முடியாது. மரணத்தறுவாயில், கணவன் தன் மக்களைக் காப்பாற்றும்படி மருமகனிடம் ஒப்புவித்தான். ஆனால், அவன் இறந்தவுடன் மனைவி மக்கள் யாவரும் வீட்டிலிருந்து வெளிப்படுத்தப்பட்டனர். அப்பொழுது தங்களுக்குள் வழங்கும் மருமக்கள் வழி அவகாசக்கிரமத்தை அப்பெண் பழித்துரைக்கிறாள்...

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிமணி சி.தேசிகவிநாயகம் பிள்ளை :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :