மூவூருலா

ஆசிரியர்: உ.வே.சாமிநாதையர்

Category இலக்கியம்
Publication டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
FormatPaperback
Pages 110
Weight150 grams
₹42.00 ₹40.74    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திருச்செந்தூர் முருகன் வள்ளி தெய்வயானையுடன் உலா வருகிறான். அவன் அழகில்-வீரத்தில்-ஆற்றலில் ஈடுபாடு கொண்ட பெண்கள் அவனை வணங்குகிறார்கள். ஆசைப்படுகிறார்கள். ஆசை யின் அளவுக்கு அல்லப்படுகிறார்கள். இப்படிக் கதைப்போக்குடன் இரண்டு உலா நூல்கள் இத்தொகுப்பின் முதலில் உள்ளன. முருகனின் அனைத்துப் பெருமைகளையும் பிணைத்துப் பக்திரசத்துடன் இந்த இலக்கியங்கள் உள்ளன.தருமை என்பது தருமபுரம், தருமையாதீனம் உள்ள திருத்தலம். நாகை மாவட்டத்து மயிலாடுதுறைக்கு அண்மையில் உள்ளது. அத்தலத்தில் ஸ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் திருவீதி உலா வருகிறார், ஏழு பருவத்துப் பெண்களும் விரும்புகிறார்கள் என்ற அமைப்பில் ஞானச், செய்திகளுடன் உள்ளது தருமையுலா. தமிழில் உள்ள உலா இலக்கியம், களில் மிகப்பெரியதாக இதனைச் சொல்லலாம். சிவாத்வைதக் கருத்துகள் மிகச் செறிந்த நூல் என்றும் இதனை இயம்பலாம்.புதுவை என்பது புதுச்சேரி. இங்கு வேதபுரீஸ்வரம் என்ற திருக்கோயில் உள்ளது. அதில் எழுந்தருளியுள்ள இறைவனின் திருப்பெயர் வேதபுரீஸ்வரர் என்பதாகும். அப்பெருமானின் உலாக் காலத்து நிகழ்ந்தவையாகக் கற்பனையால் செய்யப்பெற்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
உ.வே.சாமிநாதையர் :

இலக்கியம் :

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் :