வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்
₹130.00 ₹126.10 (3% OFF)

வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்

ஆசிரியர்: வை.முத்துகிருஷ்ணன்

Category பொது நூல்கள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 144
Weight100 grams
₹70.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மறைத்தே வைத்திருந்து மறைவாகவே செயல்படுவதுதான் வர்மக்கலை (அ) மர்மக்கலை. உடலில் மர்மமாக - அதாவது மறைபொருளாகக் காணப்படும் இடங்களைப் பயன் படுத்தி போர்க் கலையும், வைத்திய முறையும் செயல்படுத்தப் பட்டன; செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
திட்டமிட்டு, மர்மப் பகுதியில் தாக்கும் கலை, அதாவது வலிந்து தாக்கும் கலை, வன்மக்கலை... அதன் திரிபு வர்மக்கலை என்றும் நாம் பொருள் கொள்ளலாமல்லாவா?
வர்மக்கலை அழியாதது; அருமையானது; வைத்தியக் கலை களில் ஈடு இணை அற்றது; எளிமையானது; ஏழைக்கும் கூட எளிதில் கிடைக்கக் கூடியது வர்மமோ, மர்மமே; மாயமோ ஜாலமோ அல்ல. விஞ்ஞான ரீதியில் ஆனது.
ஆபத்துக் காலங்களில் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வதற்காகப் பயிற்றுவிக்கப்பட்டது வர்மக்கலை.. இது அடுத்தவனின் அழிவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கலை அல்ல. ஆக்கபூர்வமானது! அநாதரவான நேரங்களில் ஆபத் பாந்தவனாகச் செயல்பட வல்லது இச் சீரிய கலை! எதிரியின் மர்மஸ்தானங்களில் அடித்தோ, தட்டியோ, தொட்டோ அவனைக் கணப்பொழுதில் நினைவிழக்கச் செய்து, அக் காலகட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமைந்த கலையே வர்மக் கலையாகும். தட்டி வீழ்த்தப்பட்ட ஒருவனை, மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்ய, மீண்டும் தட்டிவிடுவதும் மர்மக் கலையின் தர்மமாகும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

மணிமேகலைப் பிரசுரம் :