விஷ்ணு பல்லவன்
ஆசிரியர்:
உதயணன்
விலை ரூ.360
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?id=1847-8556-9195-8024
{1847-8556-9195-8024 [{புத்தகம் பற்றி பண்டைக்காலத் தமிழக அரசியலில் சேரர் - சோழர் - பாண்டியர் என்ற மூவேந்தரோடு பல்லவர்களையும் சேர்த்து நால்வேந்தராகக் கூறுவதுதான் சரியாக இருக்கும்.
<br/>தமிழ் மன்னர்களுக்கு இணையானவர்கள் பல்லவர்கள். அவர்கள் தமிழர்களல்ல என்றாலும் தமிழ்நாட்டிற்கு அவர்கள் செய்திருக்கும் கலைத் தொண்டு மகத்தானது. அதற்கான அத்தாட்சிகளை காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் இன்ன பிற இடங்களிலும் இன்றும் காணலாம்.
<br/>அவர்களது கலைதான் பின்னால் சோழர்களது கலைகளுக்கு முன்னுதாரணங்களாகத் திகழ்ந்தன. காஞ்சியில் பல்லவர் கட்டிய கைலாயநாதன் ஆலயம் தான் பிற்காலத்தில் மாமன்னன் இராஜராஜ சோழனை தஞ்சையில் பெருவுடையார் கோயிலை அமைக்கக் காரணமாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது.
<br/>அத்தகைய சிறப்பான சிற்பக்கலையைப் பிற்காலப் பல்லவரின் முதல்வனான சிம்மவிஷ்ணு தொடங்கிவைத்தான். மாமல்லபுரத்தில் அவன் கட்டத் தொடங்கிய ஆதிவராகர் குடைவரைக் கோயில்தான் பிற பல்லவ மன்னர்களைச் சிற்ப விசித்திரங்களை அமைக்கத் தூண்டுகோலாக இருந்தது. முதல்வனான சிம்மவிஷ்ணு திருமாலை வணங்கும் பாகவதனாக இருந்தான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866